Sunday, 12 April 2015

பட்டுக்கோட்டை அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 10 பவுன் நகை திருட்டு

ஏப்ரல்:11-பட்டுக்கோட்டையை அடுத்த ஆத்திக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது60). விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் 2 பேரும் நேற்றுமுன்தினம் காலை வயலுக்கு சென்றுவிட்டு இரவு 7 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது வீடு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று அவர்கள் பார்த்தனர். அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி நகைகளை திருடியது தெரியவந்தது.இதுபற்றி தாலுகா போலீசில் அய்யாக்கண்ணு புகார் செய்தார். அதன்பேரில் பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தஞ்சையிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.

Thursday, 9 April 2015

பேராவூரணி அருகே வேன் மோதி மாணவன் பலி

ஏப்ரல்:09-பேராவூரணி அருகே உள்ள மருதங்காவயல் கிராமத்தை சேர்ந்தவர் செபஸ்தியான். இவருடைய மகன் அர்னால்டுஜான்சன் (வயது9). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் உடல்நிலை சரியில்லாததால் அர்னால்டு ஜான்சனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல செபஸ்தியான் மகனுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சின்ன ஆவுடையார் கோவில் என்ற இடத்தில் அமைந்துள்ள நிழற்குடை அருகே காத்திருந்தார். அப்போது அந்த ரோட்டில் நாகப்பட்டினத்திலிருந்து மல்லிப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த வேன் நிலை தடுமாறி பஸ்சுக்கு காத்திருந்த அர்னால்டுஜான்சன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவனை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அர்னால்டுஜான்சன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து நாகப்பட்டினத்தை சேர்ந்த வேன்டிரைவர் பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்

ஞானபீட விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மரணம்

பாகிஸ்தானுக்கு ரூ.6,200 கோடி ஆயுத சப்ளை

கூடுதல் பயணிகளுக்கு சவுதி அரசு மறுப்பு

ஏப்ரல்:08-ஹஜ்’ பயணத்துக்காக உலகில் உள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியா நாட்டுக்கு செல்கின்றனர். அந்தவகையில் இந்தியாவில் இருந்து எத்தனை பேர் வரவேண்டும் என்று அறிவித்த பின்னர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், மும்பையில் உள்ள அகில இந்திய ஹஜ் கமிட்டியும் சேர்ந்து மாநில வாரியாக பிரித்து அனுப்புகிறது.கடந்த 2013–ம் ஆண்டு 1 லட்சத்து 70 ஆயிரத்து 25 பேர் சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 1 லட்சத்து 36 ஆயிரமாக குறைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ‘ஹஜ்’ பயணிகளின் விருப்பப்படி 1 லட்சத்து 41 ஆயிரத்து 790 பேர் என்ற எண்ணிக்கையில் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சவுதி அரேபியா அரசுக்கு கோரிக்கை விடுத்தது.ஆனால் சவுதி அரேபியா அரசு இதனை ஏற்கவில்லை. கடந்த ஆண்டை போல் 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் மட்டுமே வரமுடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.இந்தியாவில் இருந்து ‘ஹஜ்’ பயணம் செல்வதற்கு முன்பாக சவுதி அரேபியா நாடு பயணிகளின் எண்ணிக்கையில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக ஆயிரம் முஸ்லிம்களுக்கு ஒருவர் என்ற விதியை கடைப்பிடித்து வந்தது. ஆனால் தற்போது ‘மெக்கா’ பள்ளிவாசல் விரிவாக்கத்துக்காக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.இந்தப்பணி 2020–ம் ஆண்டு வரை நடக்கிறது. கட்டுமானத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் எண்ணிக்கையை 2020–ம் ஆண்டு வரை 20 சதவீதம் குறைத்துள்ளது. அன்படி இந்தியாவில் இருந்து செல்பவர்களில் 34 ஆயிரம் பேர் குறைக்கப்பட்டு உள்ளனர். தற்போது ‘ஹஜ்’ காலங்களில் 30 லட்சம் பேர் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையை 2020–ம் ஆண்டு 1 கோடியாக உயர்த்த சவுதிஅரேபியா நாடு முடிவெடுத்துள்ளது.நடப்பாண்டு இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் செல்ல உள்ளனர். இதில் அரசு சார்பில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேரும், டிராவல்ஸ் நிறுவனங்கள் சார்பில் 31 ஆயிரம் உட்பட 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் செல்கின்றனர். இதில் தமிழகத்தில் இருந்து 2 ஆயிரத்து 660 பேர் செல்ல உள்ளனர். இவர்களில் ஆண்கள், பெண்கள் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் இருந்து முதல் விமானம் ஆகஸ்டு 17–ந்தேதி புறப்படுகிறது.300 பயணிகளுக்கு சேவை செய்வதற்காக 1 தொண்டர் மூலம் 2 ஆயிரத்து 660 பேருக்கு 9 தொண்டர்கள் பயணிகளுடன் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கின்றனர். இந்த தொண்டர்களுக்கான செலவை ரூ.18 லட்சத்தை அரசு ஏற்கிறது என்று தமிழ்நாடு ‘ஹஜ்’ சர்வீஸ் சொசைட்டி வட்டாரங்கள் தெரிவித்தன.

Tuesday, 7 April 2015

திருச்சி விமானநிலையத்திற்கு விருது


திருச்சி, : அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதில் முதலிடம் பெற்ற திருச்சி விமான நிலையத்திற்கு விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் கஜபதிராஜ் விருதை வழங்கினார். திருச்சி விமான நிலைய இயக்குனர் நெஹி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த வருடத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லகூடிய விமான நிலையங்களுக்கு விருது வழங்க, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா (ஏஏஐ) முடிவு செய்தது. இதன்படி, சர்வதேச 60 விமான நிலையங்களுக்கு மொத்தம் 5 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன.  

இதில் திருச்சி விமானநிலையம் 4.7 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றது. சண்டிகர் விமான நிலையம் 4.69 மதிப்பெண் 2வது இடத்தையும், 4.68 மதிப்பெண்கள் பெற்று புவனேஸ்வர் விமான நிலையம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் கஜபதிராஜ் இதற்கான விருதுகளை டெல்லியில் வழங்கினார்.  மேலும் திருச்சி விமான நிலையத்தில் உள்ள பூங்காவை பராமரிப்பதற்கான பணி தனியாரிடம் அளிக்கப்படவுள்ளது. சர்வதேச தரத்திலான கேண்டீன் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு நெஹி தெரிவித்தார்.

இந்திய கடற்படையின் நடவடிக்கையை கண்டு உலகநாடுகள் வியப்பு