பட்டுக்கோட்டை அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 10 பவுன் நகை திருட்டு
ஏப்ரல்:11-பட்டுக்கோட்டையை அடுத்த ஆத்திக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது60). விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் 2 பேரும் நேற்றுமுன்தினம் காலை வயலுக்கு சென்றுவிட்டு இரவு 7 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது வீடு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று அவர்கள் பார்த்தனர். அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி நகைகளை திருடியது தெரியவந்தது.இதுபற்றி தாலுகா போலீசில் அய்யாக்கண்ணு புகார் செய்தார். அதன்பேரில் பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தஞ்சையிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment