Thursday, 9 April 2015

பேராவூரணி அருகே வேன் மோதி மாணவன் பலி

ஏப்ரல்:09-பேராவூரணி அருகே உள்ள மருதங்காவயல் கிராமத்தை சேர்ந்தவர் செபஸ்தியான். இவருடைய மகன் அர்னால்டுஜான்சன் (வயது9). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் உடல்நிலை சரியில்லாததால் அர்னால்டு ஜான்சனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல செபஸ்தியான் மகனுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சின்ன ஆவுடையார் கோவில் என்ற இடத்தில் அமைந்துள்ள நிழற்குடை அருகே காத்திருந்தார். அப்போது அந்த ரோட்டில் நாகப்பட்டினத்திலிருந்து மல்லிப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த வேன் நிலை தடுமாறி பஸ்சுக்கு காத்திருந்த அர்னால்டுஜான்சன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவனை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அர்னால்டுஜான்சன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து நாகப்பட்டினத்தை சேர்ந்த வேன்டிரைவர் பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்

No comments:

Post a Comment