Tuesday, 7 April 2015

திருச்சி விமானநிலையத்திற்கு விருது


திருச்சி, : அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதில் முதலிடம் பெற்ற திருச்சி விமான நிலையத்திற்கு விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் கஜபதிராஜ் விருதை வழங்கினார். திருச்சி விமான நிலைய இயக்குனர் நெஹி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த வருடத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லகூடிய விமான நிலையங்களுக்கு விருது வழங்க, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா (ஏஏஐ) முடிவு செய்தது. இதன்படி, சர்வதேச 60 விமான நிலையங்களுக்கு மொத்தம் 5 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன.  

இதில் திருச்சி விமானநிலையம் 4.7 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றது. சண்டிகர் விமான நிலையம் 4.69 மதிப்பெண் 2வது இடத்தையும், 4.68 மதிப்பெண்கள் பெற்று புவனேஸ்வர் விமான நிலையம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் கஜபதிராஜ் இதற்கான விருதுகளை டெல்லியில் வழங்கினார்.  மேலும் திருச்சி விமான நிலையத்தில் உள்ள பூங்காவை பராமரிப்பதற்கான பணி தனியாரிடம் அளிக்கப்படவுள்ளது. சர்வதேச தரத்திலான கேண்டீன் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு நெஹி தெரிவித்தார்.

No comments:

Post a Comment