Monday, 6 April 2015

பன்றி காய்ச்சலுக்கு இதுவரை ‘2,123’ பேர் பலி

ஏப்ரல்:06-நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பரவிய பன்றி காய்ச்சலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாயினர். நாடு முழுவதும் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததாக தெரியவந்துள்ளது.இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் 34,636 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி அதில் 2,123 பேர் உயிர் இழந்துள்ளனர். அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 6,544 பேர் பாதிக்கப்பட்டு 436 பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான், மராட்டியம், மத்திய பிரதேச மாநிலங்கள் உள்ளன. தலைநகர் டெல்லியில் 4,249 பேர் பாதிப்புக்கு உள்ளாகி 12 பேர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment