Monday, 6 April 2015

2-வது திருமணம் செய்த நடிகை

ஏப்ரல்:05-பிரபல மலையாள நடிகை ஜோதிர்மயி. இவர் மம்மூட்டி, மோகன்லால் உள்பட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தமிழில் தலைநகரம், நான் அவன் இல்லை,வெடிகுண்டு முருகேசன், உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். டிவி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகிய இவர் பலைட் என்ற மலையாள படம் மூலம் சினிமா உலகிற்கு வந்தார் கல்லூரியில் உடன் படித்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் நிஷாந்த் என்பவரை ஜோதிர்மயி காதலித்து, 2004ம் ஆண்டு திருமணம்செய்துகொண்டார்ர்.இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர்.இந்த நிலையில் ஜோதிர்மயி பிரபல பட தயாரிப்பாளரும்,இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான அமல் நீரத்தை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கொச்சி ரிஜிஸ்டர் அலுவலகத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.மோகன்லால் நடித்த சாகர் அலயாஸ் ஜாக்கி என்ற படத்தில் ஜோதிர்மயி ஒருபாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்த படத்தில் இருந்து ஜோதிர்மயும்- நீரத்தும் காதலித்து வந்து உள்ளனர். அமல் நீரத் பிரபல ஒளிபதிவாளர் ஆவார். ராம் கோபால்வர்மாவின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் பாலிவுட் படங்கள் சிலவற்றிற்கும் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.தொடர்ந்து மலையாளத்தில் முதலில் மம்முட்டியை வைத்து பிக் பி என்ற படத்தையும், பிறகு மோகன்லாலை வைத்து சாகர் அலயாஸ் ஜாக்கி என்ற படத்தையும் பிருத்விராஜை வைத்து அன்வர் என்ற படத்தையும் இயக்கினார். தொடர்ந்து பேச்சிலர் பார்ட்டி,குள்ளண்டே பார்யா,5 சுந்தரிகள், ஆகிய படங்களை இயக்கினார் தற்போது இவரது இயக்கத்தில் வெளிவந்து உள்ள படம் இயோபிண்டே புத்தகம்

No comments:

Post a Comment