தினமும் 15 மணி நேரம் நடிக்கும் நடிகை
ஏப்ரல்:6-வெளிநாட்டில் இருந்து வந்தவர். இந்தி மொழியை உச்சரிக்கத் தெரியாதவர்’ என்றெல்லாம் கிண்டலடிக்கப்பட்டவர் நடிகை கத்ரீனா கைப். ஆனால் அவரோ எல்லா தடைகளையும் தாண்டி பாலிவுட்டில் பத்தாண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துவிட்டார். முன்னணி நடிகர்கள், இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி நல்ல பெயர் வாங்கிவிட்டார்.இவர் முதலில் வெளியே இருந்து பார்த்தபோது, இவருக்கு சினிமா உலகம் ஒரு ஜிகினா உலகமாகத்தான் தெரிந்திருக்கிறது. உள்ளே வந்த பின்புதான் அதன் உண்மைகள் புரிந்திருக்கிறது.“திரையுலகில் பணியாற்றுவது ரொம்பவே கடினம். சிலநேரங்களில் தொடர்ந்து 14, 15 மணி நேரம் நடிக்க வேண்டியதிருக்கிறது. இது சாதாரண விஷயமல்ல. அவ்வப்போது சரியான நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாது. அதெல்லாம் நமது உடம்பைப் பாதிக்கும். திரையுலகில் நீடிப்பதற்கு தீவிரமான ஆர்வம் தேவை. அத்தகைய ஆர்வம் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம்தான் நம்மால் இங்கு தாக்குப் பிடிக்க முடியும்” என்கிறார் கத்ரீனா.
No comments:
Post a Comment