Thursday, 2 April 2015

பட்டுக்கோட்டை நகர் பற்றிய சிறு குறிப்பு


பட்டுக்கோட்டை நகர் பற்றிய சிறு குறிப்பு
பட்டுக்கோட்டை நகர வாசகர்கள் தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன் நம் நகர் பற்றிய சிறு குறிப்பு உங்கள் பார்வைக்கு. இந்த பதிவில் தவறுகள் இருந்து சுட்டிக்காட்டினால் திருத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். நகரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒருதாலுகா பகுதியாகும்.
இந்தபகுதியின் அனைத்து துறைகளின் தலைமையிடமாக மாவட்ட தலைமையகம் தஞ்சாவூர் இருக்கிறது. தஞ்சாவூர் இருந்து 48 கி.மீ தொலைவில் பட்டுக்கோட்டை அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டைவரும் வழியில் ஒரத்தநாடு, உறந்தைராயன்குடிகாடு, பாப்பாநாடு, கரம்பயம் வீரக்குறிச்சி உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தின் முக்கியபகுதிகள் இருக்கின்றன. பட்டுக்கோட்டையில் இருந்து வங்காளவிரிகுடா கடற்கரை 12 கிமீ., தொலைவில் இருக்கிறது. இந்த பகுதில் கடற்கரை ஒட்டியுள்ள சுற்றுலா தளமான மனோரா தஞ்சையை ஆண்ட ராஜா சரபோஜிமகாராஜாவினால் கட்டப்பட்டு முன்பு மிக பிரபலமான இடமாக இருந்து.
பட்டுக்கோட்டை 21,83 சதுரபரப்பளவில் உள்ளது. தாலுக்கா தலைமையிடமான பட்டுக்கோட்டையை சுற்றி அழகான கலாச்சாரம் மேலோங்கும் அத்திவெட்டி, பிச்சினிக்காடு, அணைக்காடு, முதல்சேரி, செங்கப்படுத்தான்காடு, தம்பிக்கோட்டை, சூரப்பள்ளம். செண்டங்காடு, பண்ணவயல், நடுவிக்கோட்டை, பாலத்தளி என தனக்கென ஒருகலாச்சார சம்பிரதாயங்களை கொண்டு நடைபோடும் சுவரஸ்யமான அழகிய கிராமங்கள் நிறைய இருக்கின்றன.
இங்கே மக்கள் முக்கிய தொழில் பாசன காவிரி நதிநீர் பயன்படுத்தி விவசாயம் செய்வது. தொழில்துறை சார்பாக இந்தபகுதியில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை, அரசுதரப்பில் ஒருநவீன அரிசி ஆலையும், குறிச்சிகிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்புடன் அமைந்துள்ள மின்தயாரிப்பு நிறுவனம் மட்டுமே தொழில்சார்ந்து இருக்கிறது. மிகவும் பிரசித்தி பெற்ற நாடியம்மன்கோவில் திருவிழா இந்த பகுதியின் ஆன்மீகவாதிகளுக்கான மிகபெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த நகரில் பிறந்து நகருக்கு பெருமை சேர்த்தவர்கள் செறிவு மிக்க சிந்தனையாளர் கவிஞர் ஐயா. திரு . பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள், பேச்சாற்றலில் தன்னிகரற்று விளங்கி திராவிட இயக்கத்தின் ஆரம்பாகால தூணான ஐயா திரு.அழகிரி அவர்கள், முன்னாள் அமைச்சர் ஐயா திரு . எஸ்.டிசோமசுந்தரம் அவர்கள், நாவல் உலகில் தற்போது சினிமாவில் கொடிக்கட்டிபறக்கும் பட்டுக்கோட்டையின் நடமாடும் அடையாளமாக வாழ்ந்துவரும் அண்ணன் திரு பட்டுக்கோட்டை பிரபாகர். அணைக்காடு ஈன்றெடுத்த கன்னிப்பருவத்திலே படகதாநாயகன் அண்ணன் திரு ராஜேஷ்,
திரைப்பட உலகில் இந்தியாவின் சாதனையாளர்கள் வரிசையில் தனது வாகைச்சூடவா படத்தின்மூலம் தேசிய விருது வாங்கி தன்னோடு தான்சார்ந்து வாழும் பகுதியையும் தேசஅளவில் பேசவைத்த சகோதரர் திரு.சற்குணம், அவருடன் பணியாற்றி புகழ்பெற்றுவரும் தற்போதைய நடிகரும் எதிர்கால இயக்குனருமான திருமுருகன், தம்பிக்கோட்டை பட இயக்குனர் அம்முரமேஷ் முதலிடம்பட இயக்குனர் திரு. குமரன். பிரம்மன் பட இயக்குனர் சாக்ரட்டீஸ், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பட்டுக்கோட்டை மணிகூண்டு பகுதியில் வாழ்ந்ததாக சொல்லப்படும் காலம் சென்ற முன்னாள் இந்திய திருநாட்டின் ஜனாதிபதி வெங்கட்ராமன். என இன்னும் இன்னும் நிறைய சாதனையாளர்களை கொண்ட ஊர் இந்த பட்டுக்கோட்டை.
தஞ்சை மவட்டத்தின் மூன்று நகராட்சிகளாக இருந்த பட்டுக்கோட்டை , தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் நகராட்சிகளில்பட்டுக்கோட்டை மட்டுமே தாலுக்கா அளவில் பெரியதாக சொல்லப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பெயரில் தற்போது தஞ்சை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தபகுதி 17ம்நூற்றாண்டில் இருந்து வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை 21.83 கிமீ (8.43 சதுரகிலோமீட்டர்) பரப்பளவுகொண்டது, 1975 முதல் தரநகராட்சியாகவும், 1984ல் தேர்வுநிலை நகராட்சியாகவும் செயல்படுகிறது. நிர்வாகத்தினால் 33 நகராட்சி வார்டுகளினால் நிர்வகிக்கப்படுகிறது, தாலுக்காவின் வருவாய் கிராமங்களாக கைலாசநாதபுரம், மகாராஜசமுத்திரம், நாடியம்பாள்புரம், ரெங்கோலியப்பா தோட்டம் மற்றும் பாப்பாவளி பாளையங்கோட்டை என ஐந்து பகுதிகள் பிரித்து நிர்வகிக்கப்படுகின்றன. 1801ம் ஆண்டு முதல் 1901 ம் ஆண்டு வரை வெறும் 7603 பேர் மட்டுமே மொத்த மக்கள் தொகை. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 73.097 பேர் கொண்ட மக்கள் தொகையினை கொண்ட ஊராகும், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏவாக திரு என்.ஆர்.ரங்கராஜன் (காங்கிரஸ்) கடந்த மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் பலம் இல்லை என்றாலும் தனது முக்குலத்து சமூக ஆதரவு, மற்றும் சுத்தமானவர், பிரச்சனையற்றவர் என்ற தனக்கான நல்ல பெயருடன் அனைத்து மக்களின் பெரும் ஆதரவுடன் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். பட்டுக்கோட்டை பகுதியில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அதிகபலத்துடன் இருக்கிறது. நகர்மன்றத்தலைவராக திரு ஐயா. சீனிவாசன் இருந்துள்ளார், அதன் பிறகு மறைந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் அண்ணன் திரு. சு. விசுவநாதன் வாழ்ந்த காலத்தில் அவரது தனிப்ட்ட செல்வாக்கின் மூலம் ம.தி.மு.க., வும் மிக செல்வாக்குடன் நகராட்சியினை கைப்பற்றி ஆட்சிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமதி ஜெயப்பாரதி விசுவநாதன் அவரை தொடர்ந்து திரு சீனி. இளங்கோ, அவரது மனைவி பிரியா இளங்கோ ஆகியோர் தலா ஒரு முறை நகர்மன்ற தலைவராக இருந்துள்ளனர்.
பட்டுக்கோட்டையில் இருந்து திருச்சி விமானநிலையம் 135 கிலோமீட்டர்( 84 மைல் ) தொலைவில் இருக்கிறது. அருகில் உள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் இருந்து 16 அடி உயரத்தில் இருக்கிறது, அந்த கடற்கரை 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. புகழ் பெற்ற மனோரா 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. 2011 கணக்கின் படிதாழ்த்ப்பட்டோர் 5.86%, பழங்குடியினர் 8%, நகரின்சாரசரிகல்வியறிவு 72.99%, தேசிய கல்விஅறிவு அறிவிப்பின்படி 80.68%மும் இருந்தனர். 
 இந்த பக்கத்தில் கூடுதலாக ஏதாவது சேர்க்கலாம் என உங்களுக்கு தோன்றினால் newspattukkottai@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு ஆதாரத்துடன் அனுப்பிவையுங்கள்.

No comments:

Post a Comment