Thursday, 2 April 2015

பட்டுக்கோட்டையில் ரூ.10 1/2 கோடியில் சாலைகள்

பிப்ரவரி:28-
பட்டுக்கோட்டை நகரசபை கூட்டம் தலைவர் எஸ்.ஆர்.ஜவகர்பாபு தலைமையில் நடைபெற்றது. ஆணையர் கே.அச்சையா, துணைத்தலைவர் வி.கே.டி.பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பட்டுக்கோட்டை நகராட்சி பொன்விழா ஆண்டையொட்டி நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்பாடு செய்ய அரசு சிறப்பு உதவித்தொகை ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில் கீழ்க்கண்டவாறு பணிகளை செய்வது என்று அறிவிக்கப்பட்டது.இதன்படி நகரில் சாலைகளை மேம்படுத்த ரூ.10 கோடியே 60 லட்சமும், குடிநீர் மேம்பாட்டு பணிக்கு ரூ.3 கோடியே 44 லட்சமும், மழைநீர் வடிகால் அமைக்க ரூ.2 கோடியே 90 லட்சமும், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ரூ.2 கோடியே 77 லட்சமும், குளங்களை மேம்படுத்த ரூ.96 லட்சமும், தெருவிளக்குகளை மேம்படுத்த ரூ.63 லட்சமும், பொன்விழா நினைவுப்பூங்கா ரூ.1கோடியிலும், பொன்விழா நினைவுத்தூண் 10 லட்சத்திலும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என நகர சபை தலைவர் கூறினார்.மேலும் ரூ.40 லட்சத்தில் தெருக்களில் பெயர் பலகை, திசை காட்டி பலகை அமைத்தல், ரூ.20 லட்சத்தில் 15 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பிடமும், ரூ.60 லட்சத்தில் பஸ்நிலைய மேம்பாடு, ரூ.1 கோடியே 25 லட்சத்தில் நகராட்சி கூடுதல் அலுவலக கட்டிடம் கட்டுதல், ரூ.15 லட்சத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு 2 இடங்களில் கழிப்பிடம் மற்றும் உடைமாற்றும் அறை கட்டுதல் என மொத்தம் ரூ.25 கோடியில் வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்ற ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment