8வது ஐபிஎல் கிரிக்கெட் நாளை தொடக்க விழா
கொல்கத்தா: 8வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நாளை (செவ்வாய்) பிரம்மாண்டமாக நடக்கிறது. ரசிகர்களை மகிழ்விக்கக் கூடிய வகையில் பாலிவுட் நட்சத்திரங்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் தொடக்க விழா, இரண்டு மணி நேரம் நடைபெறும். தொடக்க விழா நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் தொகுத்து வழங்குகிறார். பாலிவுட் நட்சத்திரங்கள் பர்ஹான் அக்தர், இசையமைப்பாளர் பிரிதாம் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.விழாவில் ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா சர்மா ஆகியோரின் நடனம் இடம்பெறுகிறது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்கிறார்கள். விழாவில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் கோப்பையை ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
மாலை 5 மணி முதல் தொடக்க விழா நடைபெறும் மைதானத்துக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தொடக்கவிழா நிகழ்ச்சிகள் சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் ஆகிய தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது
No comments:
Post a Comment